முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 279 |
Untitled Document | | வாங்கிப் பெட்டியில் வைத்துக் கொள்வேன்; சிறிது மோசஞ் செய்திட மாட்டேன்; வக்கீல் குமஸ்தன் சத்திய வாசகன் | 1360 | | இன்னார் என்றுஇந் நாடெல்லாம் அறியும். ராஜியும் வேண்டாம், கீஜியும் வேண்டாம்; நானே கேஸு நடத்தி, ஜயமும் வாங்கித் தருகிறேன்; மலைக்க வேண்டாம்; என், | 1365 | | வக்கீல் பேர்க்கு ஒரு வக்கா லத்தை எழுதிப் போடும்" என்றெல்லாம் சொல்லி இந்திர சாலம் மந்திர சாலம் மகேந்திர சாலமும் வல்லஇம் மனிதன் நாட்பண மாக நாலு ரூபாயும் | 1370 | | வக்கா லத்தும் வாங்கிச் சென்றான் 'அர்ஜி கொடுத்தேன், அவதி மாற்றினேன். பிரதி யுத்தரமும் பேஷாய்க் கொடுத்தேன். கேஸில் ஜயமும் கிடைக்கும், நிச்சயம்' என்று வார்த்தைகள் இதமாய்க் கூறி, | 1375 | | இடையிடை ரூபாய் இருபது முப்பது தட்டிக் கொள்வான்; (தலைவிதி! தலைவிதி! ) கொடுத்துவைத் தவர்கள் கொண்டு போனார் என்விதி யானும் இப்படி யானேன்! நாகைக் கோர்ட்டில் கேஸு நடந்தது; | 1380 | | நடந்தது, நடந்தது, நாலரை வருஷம்! ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே! இரவும் பகலும் இன்றி என் கணவர் பட்ட பாடெல்லாம் பகர்வதும் எளிதோ? திங்கட் கிழமை தெரிசனம் போச்சு, | 1385 | | திண்டாட் டங்கள் தீரா தாச்சு! வெள்ளிக் கிழமை தெரிசனம் போச்சு, விவகா ரங்கள் மிகவே யாச்சு! குளியும் போச்சு, கும்பிடும் போச்சு, கோர்ட்டு வாசல் குடியிருப் பாச்சு! |
| |
|
|