பக்கம் எண் :

280கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1390   மாதாந் தரங்கள் மறந்தே போச்சு
வக்கீ லாபீஸ் வாழிடம் ஆச்சு!
உயர்ந்த மேடை உறைவிடம் போச்சு,
ஓட்டுத் திண்ணை உறங்கிட மாச்சு!
மெத்தை திண்டு விதானம் போச்சு,

1395 விரிக்கும் பாய்அவர் மேல்முண் டாச்சு!
துப்பட் டாவும் தொங்கலும் போச்சு!
துவர்த்து முண்டும் துணியுமே யாச்சு!
புட்டும் பழமும் காப்பியும் போச்சு,
புளித்த காடியே போதுமென் றாச்சு

1400   தோசை இட்டலி தோய்ப்பனும் போச்சு,
தொந்தியும் கரைந்து சுருங்குவ தாச்சு!
சுகந்தத் தூளும் சோப்பும் போச்சு,
சும்மா சிரங்கு சொறிவது மாச்சு,
சீலைக் குடையும் செருப்பும் போச்சு,

1405   தினமும் வெயிலில் திரிவது மாச்சு!
அரைவண் டியுமாடும் அனைத்தும் போச்சு,
அஞ்ச லோட்டம் அவர்க்கே யாச்சு!
மட்டிலாக் கவலை மனங்குடி கொண்டது,
அளவிலாத் துன்பம் அடிமை செய்தது!

1410   ஐயோ! யாங்கள் அனைவரும் அந்நாள்
அடைந்த துயரெல்லாம் யாரே அறிவார்?
வேறு
             1400 குலக்குறத்தி வரினுமொரு
     கோடங்கி வரினும்
குறிகேட்டுப் பொருள்விரித்துக்
     கொண்டிருந்தோம், அம்மா!
துலக்கமுறப் பரல் பரத்திச்
     சோசியர்கள் கணித்துச்
   
1415 சொன்னவைகள் உண்மை யென்று
     துணிந்திருந்தோம், அம்மா!