Untitled Document
141. | | இந்திர சாலமெல்லாம் - கவியில் இயற்றிக் காட்டிடு வோன்; மந்திரச் சொல்லாலே - உள்ளம் மயங்கச் செய்திடு வோன். |
142. | | உலக உண்மைகளை - எவரும் உணரக் கூறிடு வோன்; அலகி லாக்கலைகள் - உறையும் ஆலய மாகிடு வோன். |
143. | | பண்டைத் தமிழ்மொழியைப் - படித்துப் பக்குவம் செய்துவைத் தோன்; கண்டின் சுவையெல்லாம் - சொல்லில் கனியக் காட்டிடு வோன். |
144. | | எவரும் போற்றிடவே - தமிழில் இராம கதைபுனைந் தோன்; புவனம் உள்ளளவும் - அழியாப் புகழ் பரந்திடு வோன். |
145. | | விருத்துப் பாவினிலே - கருத்தை விளங்கச் செய்தளித் தோன்; திருத்தம் பெற்றநடை - தமிழில் தெரியக் காட்டிநின் றோன். |
146. | | அணி யணியாக - அணிகள் அடுக்கி வைத்திடு வான்; மணி மணியான - பொருள்கள் வாரி வழங்கிடு வான். |
147. | | பண்ணுக் கிசைவாக - விருத்தம் பாடி அளித்திடு வான்; எண்ணும் கருத்துடனே - சந்தம் இசையச் செய்திடு வான். |
148. | | தீது நன்மையெல்லாம் - ஆய்ந்து தெளியச் சொல்லிடு வான்; வாதி பிரதிகளின் - வழக்கை வரைந்து காட்டிடுவான். | |
|
|