பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு29

Untitled Document
149   அரக்கர் நெஞ்சறி வான் - முனிவர்
     அகமும் கண்டறி வான்;
குரங்கின் உள்ளறி வான் - வேடன்
     குணமும் நன்கறி வான்.

150   நாடகக் காட்சி யெல்லாம் - கவியில்
     நன்கு காட்டிடு வான்;
பாடகர் போற்றிடவே - இனிய
     பண்கள் தந்திடு வான்.

151   மூவர் முடிவேந்தர் - போற்றும்
     முத்தமிழ்ப் பாவேந் தன்,
தேவி அருள்பெற்றான் - தமிழ்தாய்
     செய்தவத் தால்பிறத் தான்.

152   நன்று செய்தவள்ளல் - சடையன்
     நாமம் இப் புவியில்
என்றும் நின்றிடவே - கவியில்
     இடம் அறிந்தளித் தோன்.

153   புவி யரசரெல்லாம் - நிதமும்
     புகழ்ந்து பாராட்டும்
கவியரசர் தொழும் - பெரிய
     கம்ப நாடாள் வான்.

154   கம்பன் கவிவாழ்கர - இராம
     கதை நிதம் வாழ்க;
அம்புவி மீதெங்கள் - அருமை
     அமுதத்தமிழ் வாழ்க!

வேறு

155   எத்திக்கும் போற்றும் இராமன் திருக்கதையைத்
தித்திக்கும் செந்தமிழில் செய்தளித்து - நித்தமும்
அம்புவியில் மக்கள் அமுதம் அருந்தவைத்த
கம்பன் கவியே கவி.

156. உள்ளம் மகிழ உரைநா அமுதூறக்
கொள்ளும்இருகாதும் குளிரவே - தெள்ளரிய