Untitled Document | 1475 | | மக்களுக்கு என்றொரு வஸ்து வாகிலும் கொடுத்தது மில்லை, குடியிருப்பதற்கு வீடும் அவர்க்கு வேறிலை, அப்பா! தங்கத்தை நீயே தாலி கட்டினால், கவலையின்றிக் கட்டையை விடுவேன். | | 1480 | | அவளும் சமைந்து ஈராண்டுகள் ஆச்சது; கண்ணால் உங்கள் கல்யா ணத்தைக் காண்பனோ? தெய்வ கடாக்ஷம் எப்படியோ! அத்தைமார் இவர்கள் அல்லும் பகலும் படும்பா டுகள்நீ பார்க்க வில்லையோ? | | 1485 | | அப்பா! இவரை ஆதரித்து என்றும் காப்பாற் றுவது உன் கடமை யல்லவோ? பயலையும் நீகண் பார்த்துக்கொள், ஐயா! படிப்பான் கருத்தாய், பணந்தான் இல்லை; பரிக்ஷை கொடுத்துப் பாஸாய் வரஇனும் | | 1490 | | ஐந்து வருஷம் ஆகும். அப் பொழுதுஉன் தங்கை வயது சரியாய் வந்திடும் மேற்கரி ரியம்உன் விருப்பம் போலச் செய்து கொள், நீ தெரிந்தது தானே? இந்த | | 1495 | | ஊரி லுள்ள ஒருபய லாவது? நல்லவன் என்றுநீ நம்பி விடாதே. கொஞ்சம் இடம்நீ கொடுத்தா யானால், உள்ளதை யெல்லாம் ஒன்றில் லாமல் கொள்ளை யடித்துக் கொண்டுபோய் விடுவான். | | 1500 | | நச்சு வித்துகள்! நச்சு வித்துகள்! நம்பல் ஆகாது! நம்பல் ஆகாது! என்னடா, அப்பா? என்ன செய்யட்டும்? வயித்தியன் ஒழுங்காய் வருகிறா னில்லை; தக்க மருந்தும் தருகிறா னில்லை; | | 1505 | | பணம்பணம் என்று பதைத்துச் சாகிறான், எழுந்திருப் பதுவும் இனியிலை; ஆயினும், | | |
|
|