முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 285 |
Untitled Document | | | ஆட்டு லேகியம் கூட்டித் தின்றால் சுகம்வரு மென்று சொல்லுகிறார்கள்; கையிற் பணமில்லை, கடன்தரு வாரிலை; | | 1510 | | வழக்கில் முதலை வாரி யெறிந்தேன்; கிழக்கு மேற்காய்க் கிடக்கின்றேன் இதோ! என்ன செய்யலாம்? யாரை நோகலாம்?" என்று இம்மொழிகள் இசைப்பது கேட்டு அவர் கூடப் பிறந்து உயிர் கொள்ளும் வியாதிபோல், | | 1515 | | அருமை மதினி ஆங்கார வல்லி காந்தாரி யம்மை கடுகி வந்தாள், மகனை நோக்கி, "மடையா, மூடா! முருக்குத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே! ஐயா உன்னிடம் சொல்லி அனுப்பின | | 1520 | | செய்திகள் என்ன? நீ செய்வதிங்கு என்ன? நீயும், ஆண்பிள்ளை யோடா? அவலட் சணமே! அத்தைமார் கூட அழஇருந் தனையோ? அவர், | | 1525 | | கைவிஷம் கொடுத்துக் கணவனைக் கைவசம் ஆக்க நினைத்த அரக்கிகள் அல்லவோ? வருஷம் ஐந்தாய் வழக்கும் சண்டையும் மூட்டி விட்ட முண்டைகள் அல்லவோ? நினைத்த காரியம் நிமிஷம் முடிப்பரே! | | 1530 | | மாய வல்லிகள் வலையில் நீயும் விழுந்துவிட் டாயோ? வெட்கம்! வெட்கம்! போதும் எழுந்திரு! போதும்! போதும்! அரங்குக் கதவை அடைத்துப் பூட்டிவை ; தட்டுக் கதவையும் சங்கிலி யிட்டுவை; | | 1535 | | சாய்ப்புக் கதவிலும் சங்கிலி யிட்டுவை; பொதிய மலையும் பொட்டண மாகி புழைக்கடை வழியாய்ப் போய்விடும், அப்பா! ஐயா வரும்வரை அங்கே நீதான் கருத்தாய் நின்று காத்திட வேண்டும். | | |
|
|