Untitled Document | | | என்று இப்படியாய் எக்கா ரியங்களும் சரியாய்ப் பார்த்துச் சட்டம் கட்டி, அரங்கு நடையின் அருகாய் ஓர் மலைப் | | 1545 | | பாம்பு போலப் படுத்துக் கொண்டாள். நினைக்க நினைக்கஎன் நெஞ்சு வேகுதே ஐயோ! சிவசிவ! அரஹார! அரஹார! போதும், போதும், இச்சன்மம் போதும்! பட்ட துயரமும் பாடும் போதும் | | 1550 | | கணவர்க்கு அந்திய காலம், தண்ணீர் குடிக்கும் பாத்திரம் குடுக்கை யானதும், பரந்த சட்டி படிக்க மானதும் பாலும் அன்னப் பாலே யானதும், இனி எடுத்துச் சொல்வது ஏனோ? அம்மா! | | 1555 | | மருமக் கள்வழி வந்து பிறந்தவர்க்கு ஏதும் புதுமை இவற்றில் உண்டோ? ஈனாப் பேச்சிபோல் எங்களை வெருட்டின மதினியின் மீதும் வருத்தமொன் றில்லை. காயம் மணக்குமோ? காஞ்சிரம் இனிக்குமோ? | | 1560 | | இயற்கையை மாற்ற யாரால் முடியும்? இவையெல்லாம் அல்ல, என்றென்றைக்கும் என் மனத்தி லிருந்து வாளா யறுப்பது ! நெஞ்சி லிருந்து நெருப்பா யெரிவது! மற்று அக்காரியம் வையக மெல்லாம் | | 1565 | | அறியும் படியான் அறைவேன், அம்மா! கணவரின் மரண காலத்து அங்கு வந்திருந்தவர் என் மகனை நோக்கி, "தம்பி! உன் தந்தை தலைமாட் டிருந்து, தீருவா சகத்தில் சிற்சில பதிகம் | | 1570 | | படி" யெனச் சொல்லிப் பண்ணை வீட்டி லிருந்து ஒரு புத்தகம் எடுத்துக் கொடுத்தனர். |
| |
|
|