முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 287 |
Untitled Document | | | பயலும் அதனைத் திறந்து பார்த்தான். 'ஆரே தமிழை அறிபவர்?' என்றான் 'பள்ளியில் தமிழும் படித்தேனோ?' என்றான்; | | | | | | 1575 | | 'பரிக்ஷையில் தமிழொரு பாடமோ?' என்றான்; 'என்னால் படிக்க இயலாது' என்னச் சுவரிற் சாய்ந்து சும்மா இருந்தான். ஐயோ! அப்பன் மரணம் அடையுங் காலம் | | 1580 | | எமவே தனைகள் இல்லா தாக்கவும், சிந்தை சிவனடி சேரச் செய்யவும், செந்தமிழ் மறையாந் திருவா சகத்தைப் பக்க மிருந்து படிக்க அறியா மக்கள் படிப்பை வையகம் மதிக்குமோ? | | 1585 | | நாஞ்சி னாட்டில் நல்லஆண் பிள்ளை இல்லா ததனால் இப்படி யாச்சுது! மலையா ளத்தில் வரைந்திடும் கோர்ட்டு சமன்ஸு வந்தால் சரியாய்ப் படித்துக் காட்டுவ தோபெருங் காரியம் அம்மா? | | 1590 | | ஈசன் கழலுக்கு எமையா ளாக்கும் புண்ணிய நூல்களைப் புறக்கணித் திடுதல் அறிவோ? அழகோ? ஆண்மையோ? அம்மா! பண்டு தொட்டுப் பரம்பரை யாக முன்னோர் வைத்த முழுமணிப் பூணெலாம் | | 1595 | | ஆசை யோடணிந்து அழகுபா ராமல், பாசிக் காகவும் பளிங்குக் காகவும் கூச்ச மின்றியோர் குச்சுக் கடை போய்க் காத்துநிற் பவரைக் காசினி கண்டு சீசீயென்று சிரித்தி டாதோ? | | 1600 | | பைத்திய மென்று பழித்திடாதோ? அன்னை யாக்கிய அமுதினை உண்ணாது அண்டை வீட்டுக் கூழை யலந்து வாரி யுண்டு வயிறு நிரப்பும் மதியும் என்ன மதியோ? அம்மா! | | |
|
|