Untitled Document | 1605 | | நாஞ்சி னாட்டில் நடப்பவை யெல்லாம் அதிசயம்! அதிசயம்! அதிசயம், அம்மா! பாவம்! சாமியும் சுவரிற் சாய்ந்து, கண்ணீர் மாலை மாலையாய் வடித்தங் கிருந்தான். இந்தச் சமயம், எங்கள்புண் ணியத்தால், | | 1610 | | உலகெலாம் புகழும் உமையொரு பாகத் தேசிகன் பாற்சிவ தீக்ஷை பெற்றவர் நெற்றி நிறைந்த நீற்றுப் பூசினர் கழுத்து நிறைந்த கண்டிகை யணிந்தவர் உலந்து பழுத்த உடையை உடுத்தவர் | | 1615 | | தளர்ந்த நடையினர் சாந்தம் உடையவர் கண்டவர் தொழத்தக காட்சி கொண்டவர் மாணிக்க வசகர் வழங்கிய மணியெல்லாம் பேணித் தம்உளப் பெட்டியில் வைத்துத் தினந்தினம் எம்மான் திருவடி சார்த்திப் | | 1620 | | பணியுந் தொண்டர் பாக்கியம் பிள்ளைப் பட்டா வந்தனர்; படிப்புரை யிருந்தவர் வேண்டிய காரியம் விளம்பக் கேட்டு, உரைத்த நாத்தேன் ஊறி யெழவும், உள்ளமும் செவியும் ஒருங்கு குளிரவும், | | 1625 | | திருத்த மாகத் திருவாச கத்தில் பற்பல பதிகமும் பண்ணோடு ஓதினர்; இப்படி அவரும் யாத்திரைப்பத்தில், போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் சால்புவே" | | 1630 | | என்ற பாகம் எடுத்துக் கூறவே, கணவர் ஏங்கி யழுத எங்களை நோக்கினர், வாடி யழுத மக்களை நோக்கினர், கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்; | | | | | | 1635 | | கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர். | | |
|
|