முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 289 |
Untitled Document | | | 11 கும்பியெரிச்சல் படலம் | | | | ................................................ ................................................... .................................................... | 1406 | 1649 | | தீரா வழக்கும் சென்மப் பகையும் உற்றா ருக்குள் உண்டாக்கும் வழி அப்பனைப் பிள்ளை அண்டவொட் டாவழி பிள்ளையை அப்பன் பேணவொட் டாவழி புருஷனை மனைவி போற்றவொட் டாவழி மனைவியைப் புருஷன் மதிக்கவொட் டாவழி | | | | | | 1655 | | அண்ணனைத் தம்பி அடுக்கவொட் டாவழி மருமகனை மாமன் வஞ்சித் திடுவழி மாமனை மருமகன் வதைத்துக் கொழும்வழி குடியை முடிக்கும் கொடிய தீவழி | | | | | | 1660 | | அடிபிடி சண்டை அகலாப் பாழ்வழி; மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி; எண்ணும் படியுடல் என்பெலாந் தெரியக் கண்ணும் குழிந்து கன்னமும் ஒட்டி வயிற்றுக் கின்றி வறுமையின் மெலிந்து, | | 1665 | | என்போல் நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி; வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி இருள்வழி செல்பவர் இடறும் கல்வழி கூகையும் ஆந்தையும் குடிகொள்ளும் குகைவழி | | 1670 | | நெஞ்சில் படர்ந்து நிரம்பிய முள்வழி; 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ'மென்று ஒளவை சொல்மொழி அறியா மடவழி; பெற்ற பாவமும் பற்றிய நோயும் | | 1675 | | அழியாப் பொருள்களாய் அளிப்ப தன்றி, ஒருகா சேனும் உதவாச் சதிவழி! இது, | | |
|
|