Untitled Document | | | மக்கள் வழியென மதிக்கவொண் ணாது; மருமக் கள்வழி யாகவு மாட்டாது; | | 1680 | | இருவழி கட்கும் இடைவழி யாய்வரும் வழியிது போல்இவ் வையகத்து எங்கும் உண்டோ? அம்மா! உண்டோ? அம்மா! வீடு விற்று விளைநிலம் விற்று, | | 1685 | | குடிக்கும் செம்பு குழியலும் விற்று, பாத்திரம் பண்டம் பலவும்விற்று, தண்டை பாத சரங்களும் விற்று, காப்புக் காறை கடுக்கனும் விற்று, பதக்கம் சிற்றருப் பாம்படம் விற்று, | | 1690 | | தாலியை விற்றுப் பீலியை விற்று, வக்கீல்சாமி மலரடி களிலும் குமாஸ்தா மாடன் கோவில் களிலும் சாக்ஷித் தெய்வச் சன்னிதி களிலும் பழந்தேங் காய்கள் படைப்புகள் வைத்தும், | | 1695 | | வேண்டிய புகையிலை வெற்றிலை வைத்தும் விதம்விதம் வேட்டிகள் முண்டுகள் வைத்தும், சேலை தாவணி சீட்டிகள் வைத்தும், இன்னும் பலவாறு இவர்க ளிடத்து முன்னம் கொண்ட கடன்களை முற்றும் | | 1700 | | குறைகூறாது கொடுத்தும் முடிவில் வழக்கை இழந்து வாய்மண் ணாகி, உண்ண உணவும் உடுக்கத் துணியும் இல்லா தாகி, யாரும் கைவிட, முற்றத் துறந்த முனிபுங் கவர்போல் | | 1705 | | பக்கப் பழுத்த பட்டினத் தடிகள்போல் "உற்றார் சதமல, பிள்ளையும் சதமல, இப்பே ருலகில் யாரும் சதமல" என்று கூறி இனித் தோவாளைக் | | | | | | 1710 | | கஞ்சிப் புரையே கதியெனச் சென்று, பக்க மெங்கும் பரந்து சுற்றிச் | | |
|
|