Untitled Document 1439 | | கூட்டக் குடும்பங்கள் வேண்டாம், ஐயா! - இனிக் கும்பி பொறுக்கவும் மாட்டாது, ஐயா! பாட்ட நிலமும் கிடையாது, ஐயா! - எங்கள் பாகத்தைப் பங்கிட்டுத் தாரும், ஐயா! | 1440 | | ஆறு சென்டு பூமி போதும், ஐயா! - சொந்தம் ஆனால் அதுவும் ஆறு ஏக்கர், ஐயா! சோறுதந் தெங்களைக் காக்கும், ஐயா! - அது சொன்ன படிக்கும் விளையும், ஐயா! | 1441 | | காப்பிக் கடைபோக வேண்டுமென்றால் - எங்கள் கையில் அரைக்காசும் உண்டோ? ஐயா! தாப்புத் தரிப்புவே றில்லை, ஐயா! - பங்கைத் தந்துவிட்டால் வெகு புண்யம், ஐயா! | 1442 | | பங்கும் கடைசியாய்ச் செய்யும் பங்காம் - இதில் பட்ச பாதம் செய்ய நீதி உண்டோ? தங்கும் புதுச் சட்டம் வந்திடுமேல் - உங்கள் சந்ததி நாங்களும் ஆகுவமோ? | 1443 | | வீரியப் பேச்செலாம் விட்டுவிடும் - உள்ள வீதம் பகிர்ந்து கொடுத்துவிடும்; சூரியன் மேற்கே உதித்திடினும் - எங்கள் சொத்து அவகா சங்கள் போய்விடுமோ? | 1444 | | நல்லவர் உண்மை நடுநிலை - யுள்ளவர் நாட்டிற் பெரியவர் நம்வழக்கில் நெல்இதுசாவி இதுவெனக் - கண்டுஇனி நிறுத்தவர் நீதி அறிந்திடுவோம். |
| |
|
|