1451 | | சின்னஞ் சிறுமருப் பாறுளதாய்க் - காம தேனுவின் பால்நிறம் பெற்றுள்ளதாய், மன்னும் மதவேழம் போன்றிடுமீன் - இந்த வையம் ஒளிர ஒளிவிடுமீன். | 7 |
1452 | | விண்ணகம் விட்டு விரைந்திறங்கி - வரும் வீதி யெலாம்ஒளி வீசிவந்து, மண்ணகம் வாழ வலந்திரிந்து - தேவி மாயை வயிற்றில் புகுந்ததுவே. | 8 |
| | வேறு | |
1453 | | வலமருங்கில் விண்மீனும் வயிற்றில் பாய மாதேவி துயிலுணர்ந்து மகிழ்ச்சி யுற்றாள்; உலைவறியாத் திருவருளை வியந்து றின்றாள்; ஒருதாயுங் கண்டறியா இன்பங் கண்டாள். | 9 |
| | வேறு | |
1454 | | காலைக் கதிரோன் உதிக்குமுன் - ஆசிய கண்ட மெலாம்ஒளி கண்டதுவே; வேலைத் திரைகள் அடங்கினவே - திசை வெற்புகள் நின்றுகூத் தாடினவே. | 10 |
1455 | | பட்ட மரங்கள் தளிர்த்தனவே - எங்கும் பாழ்ங்கிண றும்ஊறிப் பொங்கினவே; திட்டுத் திடர்மணற் காடும் - சுடுகாடும் சில்லென்று பூத்துச் சிலிர்த்தனவே. | 11 |
1456 | | சீரிய ஓடை குளங்களிலே - நல்ல செந்தா மரைகள் மலர்ந்தனவே; பாரிலே அவ்விராக் கண்ட - புதுமையைப் பாடிட வல்லவர் யாரேயம்மா! | 12 |
| | வேறு | |
1457 | | ஓண்சுடர் உலகில் உதித்தெழு காலை மன்னிருட் சோலையோர் பொன்னிறம் பொலிய, நிரந்தொளி பரந்து நிறைவது போல, மாயையின் மனத்தெழு மகிழ்ச்சியும் பொங்கி | |