முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 3 |
Untitled Document | | முன்னையோர் சொன்னமொழி உன்னாத முழு மூடன் மூர்க்கரோ டுறவு கொண்டேன், மூவிலகும் என்னையொப் பாரில்லை, இல்லை இது முக்காலும் உண்மை, உண்மை; அன்னையே நின்னையே அல்லாது பின்னையோர் ஆதாரம் வேறும் உண்டோ? அறிவற்ற சிறியேனை, அன்பற்ற கொடியேனை, அடிமையாய் ஆண்டு கொள்வாய்; தென்னையே புன்னையே மன்னிவளர் சோலைஎத் திக்கினுஞ் சூழும் ஊராம் தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே! தேவியழ கம்மை உமையே! |
6. | | தையலார் மீதிலே மையலாய் ஓயாது சண்டாள நெறியி லெல்லாம் சாடிக் குதித்தோடி அலைகின்ற மனதையான் சற்றேனும் உன்னை நோக்கிப் பொய்யிலா மெய்யன்பு பூண்டே துதித்திடப் போதனைகள் செய்வதெல்லாம் பொறியெழும் பாலைவிழு துளியாவ தன்றிஒரு புண்ணியம் பெறுதல் காணேன்; மையிலா நெறிகாட்டி, அடியரிற் கூட்டி, உன் மலர்ப்பதஞ் சென்னிசூட்டி, வற்றாத கருணையாந் தெள்ளமுதம் ஊட்டி, எனை வாழ்விப்ப தெந்த நாளே? செய்யெலாந் துய்யவெண் சங்கினம் இராப் பொழுது திங்களின் ஒளியை வீசும் தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே! தேவியழ கம்மை உமையே! |
7. | | முக்கோணம் முதலான கோணங்க ளிட்டுனது மூலாட் சரத்தை யிட்டு மும்மலம் அறுக்கும்உன் செம்மலர் தாளையே முறையுடன் பூசை புரிவோர், | |
|
|