1471 | | கோல மிட்டார்கொடி தூக்கிவிட்டார் - உயர் கோபுரம் எங்குமே தீபமிட்டார்; சாலை கடை கோயில் வீதியெலாம் - மலர்த் தாமங்களால் பந்தல் செய்துவைத்தார். | 27 |
1472 | | பக்தியாய்ப் பூரண கும்பம்வைத்தார் - முளைப் பாலிகைப் பக்கம் பொலியவைத்தார்; குத்து விளக்குகள் ஏற்றிவைத்தார் - முத்துக் கோவைகள் எங்குமே தொங்கவிட்டார். | 28 |
1473 | | தேகப் பயிற்சிகள் காட்டிடுவார் - சிலர் செப்படி வித்தைகள் செய்திடுவார்; வேக அரவைவிட் டாட்டிடுவார் - சிலர் விண்ணில் வடங்காட்டித் தாவிடுவார். | 29 |
1474 | | வாளினை வீசி விளையாடுவார் - சிலர் மாறியெழும் ஊஞ்சல் ஆடிடுவார்! தாளிற் சதங்கை இசைதரவே - பல தாசிக ளும்சதிர் ஆடிடுவார். | 30 |
1475 | | மானைப்போல் வேடமிட் டாடிடுவார் - சிலர் வன்கரடி யாட்டம் ஆடிடுவார்; கானப் புலியைப் பழக்கி - விளையாட்டுக் காட்டிடு வார்நகர் வீதியெலாம். | 31 |
1476 | | மல்ல யுத்தம்சிலர் செய்திடுவார் - கோழி வாத்துக்கள் சண்டைக்கு விட்டிடுவார்; வெல்லுந் தகர்களைத் தாக்கவிட்டுச் - சுற்றி வேடிக்கை பார்த்துக் களித்துநிற்பார். | 32 |
1477 | | ஒத்த குழலிசை ஊதிடுவார் - கசிந்து உள்ளம் உருகவே பாடிடுவார்; மத்தளம் கொட்டித் தலையசைப்பார் - வீணை வாசித் தமுதம் வடித்திடுவார். | 33 |
1478 | | தேசம் புகழும் குலவணிகர் - மன்னன் செல்வக் குமரனைக் கண்டிடவே, ஆசை யெழத்தங்கத் தாலங்களில் - பல அற்புதப் பண்டங்கள் ஏந்திவந்தார். | 34 |