Untitled Document | | வேறு | | 1467 | | உண்மையிது சிறிதேனும் உணரா னாகி ஒப்பரிய சுத்தோத னப்பேர் மன்னன், அண்மையில் நேர்ந்தது, அபசகு னமென்ன அயர்ந்து மனம்வாடி யங்குஇருந்த காலை, | 23 | | | வேறு | | 1468 | | கற்ற பெரியோர் கனாநூல் அறிந்தவர்கள் கொற்றமுடி மன்னவனைக் கோயிலிலே சென்றுபணிந்து "உலகம் முழுதும் ஒருகுடைக்கீழ் ஆளுமன்னன், அலகில் புகழுடையான், ஆண்மைத் திருவுடையான், ஓரா யிரமாண்டுக்கு ஒருமுறை தோன்றுமவன். சீரார் பெருமான், உன் செல்வமக னாய்வந்தான்; எண்ணற் கரியபேறு ஏழுபெரும் பேறுஇந்த மண்ணில் அவனுக்கு வாய்த்திருப்ப துண்டுஐயா! தெய்வீக மான திருவாழி ஒன்றாகும்; எய்தற் கரிய இரத்தினம் ஒன்றாகும்; ஆகாய வீதிசெலும் அசுவமும் ஒன்றாகும்; வாகான வெள்ளை வாரணமும் ஒன்றாகும்; மதியிற் சிறந்தவொரு மந்திரி தானுண்டு; சதுரில் தளராவோர் தளகர்த்தன் தானுண்டு; காலைத் திருவின் கவினிற் சிறந்தநங்கை கண்ணியொரு தேவியும் உண்டு" என்றார் | 24 | | | வேறு | | 1469 | | இவ்வரிய பேறெல்லாம் எய்தற் கான இம்மகனைப் பெற்றுமகிழ் கொண்டு மன்னன், "திவ்வியமா நகரெங்கும் சிறப்புச் செய்து திருவிழாக் கொண்டாட வேண்டும்" என்றான். | 25 | | | வேறு | | 1470 | | மாநகர் வீதி விளக்கிநின்றார் - குலை வாழைகள் வாசலில் கட்டிநின்றார்; வானுயர் தோரணம் நட்டுநின்றார் - எங்கும் வாசமெழு பன்னீர் வீசிநின்றார். | 26 | |
|
|