| | வேறு | |
1460 | | வெள்ளியில் அங்கி அணிந்துகொண்டு - கையில் வெண்முத் தொளிரும் பரிசை யேந்தி ஒள்ளணி வீரர் தொடர்ந்துவர - அங்கே உம்பர்கோன் போகியாய் வந்து நின்றான். | 16 |
1461 | | நீலக் குதிரையின் மீதிலேறி - ஒளிர் நீல மணிவட்டம் கையிலேந்தி காலகும் பாண்டர் தொழுதுவர - எமன் கஞ்சியை யாளாக வந்து நின்றான். | 17 |
1462 | | செக்கச் சிவந்த குதிரையேறி - உயர் செம்மணிக் கேடகம் கையிலேந்தி, பக்கத்தில் நாகர்கள் சூழவ ருணனும் பள்ளிச் சிவிகையா ளாக வந்தான். | 18 |
1463 | | பொன்னிறமான குதிரையேறி - நல்ல பொன்னிலே செய்த கிடுகுமேந்தி, மன்னிய யக்ஷர்க ளோடுகு பேரனும் வண்ணச் சிவிகையா ளாகவந்தான். | 19 |
| | வேறு | |
1464 | | ஆண்ட விருதுகள் யாவும் கரந்துலகு ஐயுறா தங்குவந்தார் - அவர் பூண்ட வடிவால் உடையால் அப்பல்லக்குப் போகியர் தாமேயானார். | 20 |
1465 | | தேவர் இவரென யாவருங் கண்டு தெளிந்திடா வாறுவந்து - திசைக் காவலர் கூடிச் சிவிகையைத் தோளிலே காவியெ டுத்தனவே. | 21 |
1466 | | உம்பரும் அன்று மனிதராய் மாறி உலாவிக் களித்துநின்றார் - என்றும் அம்புவி வாழ இறைவனும் வந்தங்கு அவதரித் தான் எனவே. | 22 |