முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 31 |
Untitled Document | | வேறு | 162. | | உள்ளக் கருத்தையெலாம் உள்ளபடி யானிந்த வெள்ளைக் கவியில் விளம்பினேன்-தெள்ளுதமிழ் வெண்பாப் புலியும் விகடகவியுமெனக் கண்பார்த்துக் காத்தல் கடன். |
| | வேறு | 163. | | பாட்டுக் கொருபுலவன் பாரதி, அடா!-அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினான்,அடா கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா!-அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய்,அடா! | 164. | | சொல்லுக்குச் செல்லழகும் ஏறுமே, அடா!-கவி துள்ளும் மறியைப் போலே, துள்ளும் அடா! கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா!-பசுங் கன்றும்பால் உண்டிடாது கேட்குமே, அடா! | 165. | | குயிலும் கிளியும்பாட்டில் கூவுமே, அடா! - மயில் குதித்துக் குதித்துநடம் ஆடமே, அடா! வெயிலும் மழையுமதில் தோன்றுமே, அடா! - மலர் விரிந்து விரிந்துமணம் வீசுமே, அடா! | 166. | | அலைமேலே அலைவந்து மோதுமே, அடா!-அலை அழகான முத்தையள்ளிக் கொட்டுமே, அடா! மலைமேலே மலைவளர்ந் தோங்குமே, அடா! வனங்கள் அடர்ந்தடர்ந்து சூழுமே, அடா! | 167. | | விண்ணிலொளிரு மீன்கள் மின்னுமே, அடா! - விண்ணில் விளங்கும் மதிநிலவு வீசுமே, அடா! கண்ணுக் கினியசோலை காணுமே, அடா! - அதில் களித்திள மான்கள்விளை யாடுமே, அடா! | 168. | | தேனும் தினையும்பாவில் உண்ணலாம், அடா! - மிகத் தித்திக்கும் முக்கனியும் உண்ணலாம், அடா! கானக் குழலிசையும் கேட்கலாம், அடா!-ஊடே களிவண்டு பாடுவதும்கேட்கலாம்,அடா! | |
|
|