பக்கம் எண் :

310கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு

1499   "உயிரைக் கொன்றிடவே - முயலும்
ஒருவ னுக்குஅந்த
உயிரின் மேலேதும் - உரிமை
உண்டோ? கூறும் ஐயா!
55

1500   உயிரைக் காப்பவனே - என்றும்
உயிர்க்கு உடையவனாம்;
அயர்வு வேண்டாம் ஐயா! - இதுவே
அறநூல் விதி ஐயா!
56

1501   இன்னும் வீண்வாதம் - பேசி
இருப்பதேன் ! ஐயா!
அன்னம் சித்தார்த்தன் - பொருளாம்
ஐய மில்லை, ஐயா!"
57

வேறு

1502   என்று நீதி எடுத்துண ரச்செய்து
மன்றி லிருந்து மாயமாக
மறைந்து போயினன்; மறையும் அந்நேரம்,
பையர வொன்று பதுங்கி அவ்வழி
ஊர்ந்து செல்வதை ஒருவன் கண்டனன்;
சிற்சில காலை தேவரும் இந்த
வடிவந் தாங்கி வருவதுண்டு என்பரால்!
யாதோ உண்மை? யாவரே அறிவார்?
58