1518 | | 'என்று வந்திடுவான் - ரக்ஷகன் எவ்விடம் தோன்றிடுவான்' என்றுஇப் புவியெலாம் - நோக்கி எதிரே நிற்குதைய்யா! | 74 |
1519 | | கண்ணிலா உலகம் - இடறிக் கவிழ்ந்து வீழாமல், அண்ண லேஎழுந்து - விரைவில் அருள வேண்டுகின்றோம். | 75 |
1520 | | இன்னும் தூங்காமல் - வெளியில் இறங்கி வந்திடுவாய் அன்னை மாயைதரும் - இனிய அரசிளங் குமார! | 76 |
1521 | | ஓய்வு கண்டிடவே - எமைப்போல் ஓடி ஓடி அலைவாய்; தாயும் தந்தையுமாய் - உலகைத் தாங்க வந்தோனே! | 77 |
1522 | | உலகின் உண்மையை நீ - இன்னும் உணர்ந்திட வில்லை, அலகில் கருணையால் - உயிரை ஆள வந்தோனே! | 78 |
1523 | | அன்ப ருக்காக - ஆசை அறுத்திட வேண்டும்; துன்பம் நீங்கிடவே - அரசும் துறந்திட வேண்டும். | 79 |
1524 | | மாயப் பொய்மைகளைக் - கண்டு மயங்கி டாதே, ஐயா! நேய மாகஉண்மை - நாங்கள் நிகழ்ந்த வந்தோம், ஐயா! | 80 |