1510 | | நித்திய ஆனந்தத்தை - அரசே! நீயும் அடைவதுண்டோ? சித்தத் தெளிவுடையாய் - சிறிது சிந்தனை செய்திடுவாய். | 66 |
1511 | | அன்பு இருக்குமெனில் - அதிலும் அளவ றியவொண்ணா இன்பம் எய்திடலாம் - ஐயம் யாது மேயில்லை. | 67 |
1512 | | கண்ட வாழ்விதுதான் - நிலையாக் காற்றின் வாழ்வேயாம்; கொண்ட தந்தியின்மேல் - எழும் குரலே போன்றதுவாம். | 68 |
1513 | | சால வேஉலகம் - துயரால் தளர்ந்து வாடுதையா! மாலை மாலையாக் - கண்ணீர் வடிய விடுகுதையா! | 69 |
1514 | | வாழ்வு மாயமெனும் - உண்மை மனத்திற் கொள்ளாமல், நாளும் நைந்திடுதல் - எமக்கு நகைப்பே தருகுதய்யா! | 70 |
1515 | | நீல மேகந்தான் - ஆணையால் நிலையில் நின்றிடுமோ? தாலத் தோடும்நதி - கையால் தடுக்க மாறிடுமோ? | 71 |
1516 | | துன்பச் சுழியிலே - விழுந்து சுழலும் உலகத்தை இன்பக் கரையேற்ற - நீயும் இரங்கிட வேண்டும். | 72 |
1517 | | வையம் முழுவதையும் - காக்க வந்திங் கவதரித்த ஐயனே! ஆளுதற்குக் - காலம் அணுகி வருகுதைய்யா! | 73 |