1504 | | தேடும் இடங்களெல்லாம் - ஓய்வு தேடியும் காணாமல் ஓடி ஓடி அலையும் - காற்றின் ஒலியே நாங்கள், ஐயா! | 60 |
1505 | | ஆன்ற புவிவாழ்வும் - எண்ணில் அற்ப வாழ்வேயாம்; தோன்றும் ஒருமூச்சாம் - புயலாம் சூறா வளியேயாம். | 61 |
1506 | | இந்த உயிர்களெல்லாம் - பிறக்கும் இடமும் எவ்விடமே? இந்த உயிர்களெல்லாம் - மீள ஏகும் இடம் எதுவோ? | 62 |
1507 | | எங்கிருந்து வந்தோம்? - நாங்கள் எதனுக் காகவந்தோம்? இங்கிவ் உண்மையெலாம் - அறிவார் எவரு மேயுண்டோ? | 63 |
1508 | | ஒத்த பிறப்பாகும் - நாங்களும் உங்களைப் போல, சுத்த சூனியத்தில் - நின்று தோன்றிய ஆவிகளாம். | 64 |
1509 | | மாறி வருந்துயரால் - இன்ப வாழ்வே நமக்கு இல்லை; தேறும் அறிஞனே நீ - உண்மை தெரியக் கூறுகின்றோம். | 65 |