1537 | | "இடர் வரும்போதும் - உள்ளம் இரங்கிடும் போதும் உடன் பிறந்தவர்போல் - மாந்தர் உறவு கொள்வார், அப்பா! | 93 |
1538 | | ஓடும் உதிரத்தில் - வடிந்து ஒழுகும் கண்ணீரில், தேடிப் பார்த்தாலும் - சாதி தெரிவ துண்டோ அப்பா? | 94 |
1539 | | எவர் உடம்பினிலும் - சிவப்பே இரத்தம் நிறமப்பா! எவர்விழி நீர்க்கும் - உவர்ப்பே இயற்கைக் குணமப்பா! | 95 |
1540 | | நெற்றியில் நீறும் - மார்பில் நீண்ட பூணுலும் பெற்றுஇவ் உலகுதனில் - எவரும் பிறந்த துண்டோ அப்பா! | 96 |
1541 | | பிறப்பினால் எவர்க்கும் - உலகில் பெருமை வாராதப்பா! சிறப்பு வேண்டுமெனில் - நல்ல செய்கை வேண்டாம், அப்பா! | 97 |
1542 | | நன்மை செய்பவரே - உலகம் நாடும் மேற்குலத்தார்; தின்மை செய்பவரே - அண்டித் தீண்ட ஒண்ணாதார்." | 98 |
1543 | | நிலத்துயர் ஞானி - இவை நிகழ்த்தி, "என் தம்பீ கலத்தனிலே கொஞ்சம் - பாலைக் கறந்து தா" என்றான். | 99 |
1544 | | ஆயர் சிறுவனும் - கலத்தில் அளிக்க வாங்கியுண்டு, தாயினும் இனியன் - கொண்ட தளர்ச்சி நீங்கினனே. | 100 |