பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு329

Untitled Document
1529 தெய்வ குலத்திவனை - எளியேன்
தீண்டலும் ஆகாதினிச்
செய்வதும் யாதெனவே - சிறிது
சிந்தை தயங்கி நின்றான்.
85
1530 உள்ளந் தெளிந்துடனே - வெள்ளாடு
ஒன்றை அழைத்துவந்து,
வள்ளல் மயக்கொழிய - மடுவை
வாயில் கறந்துவிட்டான்.
86
1531 நட்ட தழைகளெல்லாம் - வளர்ந்து
நாற்புற மும்கவிந்து,
கட்டிய மாளிகைபோல் - வனத்தில்
காட்சி யளித்தஅம்மா!
87
1532 பூவொடு காய்கனியும் - தளிரும்
பொலிந்து நிரம்பியங்கே
மேவு பலமணிகள் - இழைத்த
விதானமும் ஆனதம்மா!
88
1533 ஐயனை இவ்வுலகம் - காணுதற்கு
அரியவோர் தெய்வமெனக்
கைகள் தொழுதுநின்றனா - சிறுவன்
களங்கமிலா வுளத்தான்
89
1534 நிலத்திற்கிடந்த ஐயன் - மெல்ல
நிமிர்ந்து தலைதூக்கிக்
"கலத்தினி லேகொஞ்சம் - பாலைக்
கறந்து தருவாய்" என்றான்.
90
1535 "ஐயையோ! ஆகாது' என்றான் - சிறுவன்,
அண்ணலே! யானும்உனைக்
கையினால் தீண்டவொண்ணா - இடையன்ஓர்
காட்டு மனிதன்" என்றான்.
91
1536 உலகம் புகழ்பெரியோன் - இந்த
உரையினைக் கேட்டுஅந்நாள்
அலகில் கருணையினால் - சொன்ன
அமுத மொழிஇதுவாம்;
92