பக்கம் எண் :

332கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு
1551 இத்தனையும் கண்டுமனம் இரங்கி, நொண்டும்
     இளமறியை இருகரத்தின் எடுத்து, வையம்
அத்தனையும் தாங்குபுயம் அணிய ஏந்தி,
     அருளுருவாம் அண்ணலும் அத்தாயை நோக்கி;

107
வேறு  
1552 “அல்ல லுறவேண்டாம் - இனித்துயர்
     ஆறி வருவாயம்மா!
செல்லு மிடத்தில் உன்தன் - மதலையைத்
     சேர்த்து விடுவேனம்மா.
108
1553 ஏழைப் பிராணிகளின் - இடர்களைந்து
     இன்ப மளிப்பதுபோல்,
வாழும் உலகிதனில் - செயுமொரு
     மாதவம் வேறுமுண்டோ?
109
1554 மீளாத் துயர்க்கடலில் - உயிரெலாம்
     வீழ்ந்து முழுகையிலே,
பாழாங் குகைதேடிச் செயுந்தவம்
     பாவமே ஆகுமம்மா!”
110
வேறு
1555 என்றுகனிந் துளமுருகி எழுந்த காலை,
     எமன்விட்ட தூதுவர்போல் ஆட்டை யெல்லாம்
குன்றிருந்து துரத்திவரு மவரைக் கண்டு,
     குவலயத்தில் அருள்மாரி மொழியும் ஐயன்;
111
வேறு
1556 “மாலைப் பொழுதின்னும் ஆகவில்லை - வெயில்
     மண்டை பிறந்து வெடிக்குதையோ!
சாலை வழிஇந்த ஆடுகளும் - எங்கு
     சாய்ந்து செலுமையா கூறும்” என்றான.
112