பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு333

Untitled Document
1557 அம்மொழி கேட்டவ் விடயருமே - “எம்ம
     ஆளும் இறவன தாணயினால்,
செம்மறி நூறு, வெள் ளாடும் ஒருநூறு
     சேர்த் வருகிறோம்” என்றுரத்தார்.
113
1558 இன்றிரா யாகம் முடியுதென்றார் - அதில்
     இத்தனை யுங்கொலை யாகும்என்றார்;
நின்றுசொல நேரம் இல்லைஎன்றார் - இன்னும்
     நீண்ட வழிபோக வேண்டும்என்றார்.
114
வேறு
1559 வள்ளலும் உள்ளம் வருந்தி, யானும் - அந்த
     மாமகம் காண வருவேனென்று,
துள்ளும் மறியுஞ் சுமந்துகொண்டு - தாயும்
     சேர்ந்து தொடர வழிநடந்தார்.
115
1560 மானேந்தும் ஈசனுளம் நாண, ஆட்டின்
     மறியேந்து பெருங்கருணைப் புனித வள்ளல்,
வானேந்து மதில்மீது கொடிகள் ஆடும்
     மாநகரின் திருவாயில் வந்தபோது;
116
வேறு
1561 செங்கதிர் வெம்மை தணிந்ததடி! - வாசத்
     தென்றல் உலாவி எழுந்ததடி!
பொங்கி வருஞ்சோணை மாநதியும் - ஒரு
     பொன்னிறம் பெற்றுப் பொலிந்ததடி!
117
1562 முல்லை மலர்ந்து மகிழ்ந்ததடி! - ஆம்பல்
     மூடிய வாயும் திறந்ததடி!
எல்லை யிலாமலர்ச் சோலையிலே - வண்டும்
     இன்னிசை பாடித் திரிந்ததடி!
118
1563 தாயும் இரங்கி வருகுதடி - கன்றும்
     தாவிக் குதித்தோடிச் செல்லுதடி!
ஆயும் பொழிலில் பறவையெல்லாம் - அந்தி
     அங்காடி போல ஒலிக்குதடி!
119