1564 | | வையகந் தன்னில் உயிர்களின் மீதருள் மாரி பொழியும் பெரியவனாம் ஐயனைக் கண்டவர் கொண்ட அதிசயம் ஆராலே கூற இயலுமடி! | 120 |
1565 | | வாயிலைக் காத்திடும் சேவகரும் - வழி மாறா விலகி ஒதுங்கிநின்றார்; தாயினும் மிக்க தயாளன் இவன் - போல்இத் தாரணி கண்டதும் உண்டோஎன்றார். | 121 |
1566 | | பாதையிற் சென்றவர் பார்த்துநின்றார் - ஒரு பக்கமாய் வண்டிகள் ஓட்டிநின்றார்; மாதவம் ஈதலால் வேறுளதோ! - என வாயார வாழ்த்திப் புகழ்ந்துநின்றார். | 122 |
1567 | | சந்தை இரைச்சல் அடங்கியது! - கடைச் சண்டையும் இல்லா தொடுங்கியது! வந்தவர் போனவர் கண்களுக்கும் - அந்த வள்ளல் முகம் விருந் தானதம்மா! | 123 |
1568 | | கூடம் எடுத்தகை தாழ்ந்திடாமல் - ஒரு கொல்லனும் கண்டு திகைத்து நின்றான்; ஊடுபா வோட்டிய சாலியனும் - நூலை ஒட்டி முடியாது விட்டுவந்தான். | 124 |
1569 | | மண்ணைச் சுமந்து வருங்குயவன் - ஈதோர் மாமுனி என்று வணங்கி நின்றான்; எண்ணெய்க் குடமேந்து வாணியனும் - இவர் யாரோ பெரியர் எனப் பணிந்தான். | 125 |
1570 | | பள்ளிச் சிறுவரும் சாடிவந்தார் - அவர் பக்கத் தண்ணாவியும் ஓடிவந்தார்; கள்ளரும் உள்ளம் மறந்துநின்றார் - வட்டக் காரரும் காசுப்பை விட்டுவந்தார். | 126 |
1571 | | மாடும் அரிசியைத் தின்றதம்மா! - அதை மாற்றி யடிப்பாரும் இல்லையம்மா! வீடும் திறந்து கிடந்ததம்மா! - உலை வெந்திடும் சோறும் குழைந்ததம்மா! | 127 |