பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு335

Untitled Document
1572 பெண்டுகள் வாசலில் கூடிநின்றார் - இந்தப்
     பேரரு ளாளனும் யாரோஎன்றார்;
கண்டவர் உள்ளம் கனியுதென்றார் - இவண்
     கண்ணின் அழகினைப் பாரும் என்றார்
128
1573 கன்னி ஒருமகள் மையெழுதி - இரு
     கண்ணும் எழுதுமுன் ஓடிவந்தாள்;
பின்னும் ஒருமகள் கூந்தலிலே - சூடும்
     பிச்சி மலர்கையில் சுற்றிவந்தாள்.
129
1574 பாலுக் கழுத மதலையுமே - ஐயன்
     பக்கம் வரக்களிப் புற்றதென்றால்,
சேலொக்கும் மாதர் விழிகள் - அவன்முகச்
     செவ்வியில் ஆழ்வது அதிசயமோ!
130
1575 கண்ணிற் கருணை விளங்குதென்றார் - நடை
     கம்பீர மாகவுங் காணுதென்றார்;
எண்ணில் இடையனும் ஆகான் என்றார் - இவன்
     இராஜ குலத்தில் பிறந்தோன் என்றார்;
131
1576 யாகப் பசுவை எடுத்துவரும் - இவண்
     எண்ணரும் பக்தி யுடையன் என்றார்;
மாகந் தொழுதேவ ராஜன்என்றார் உயர்
     மாதவச் செல்வன் இவனே என்றார்.
132
1577 செம்பு நிறைந்துபால் சிந்திடவே - சிலர்
     சிந்தை மறந்து கறந்துநின்றார்;
எம்பிரான் செல்லும் வழியின் சிறப்பெலாம்
     எங்ஙனம் சொல்லி முடிப்பேன், அம்மா!
133
வேறு  
1578 வையமிசை உயிர்கள் படும் துயரை எண்ணி
     மறுகும் உளத்து அயலொன்றும் அறியா னாகி,
ஐயனும் அவ் வீதிவழி நடந்து, மன்னன்
     அரியமகம் செய்யுமிடம் அணுகி னானே.
134