| | வேறு | |
1579 | | தாரணி மன்னவன் பிம்பிசாரன் - யாக சாலை நடுவினில் வந்துநின்றான்; ஆரணம் ஓதிய அந்தணரும் - நிரந்து அங்கிரு பக்கமாய்க் கூடிநின்றார் | 135 |
1580 | | மந்திரம் ஓதி எரிவளர்த்தார் - புகை வானை யளாவி எழுந்ததம்மா! இந்தன மிட்டுப் பெருக்கிநின்றார் - தீயும் ஏழுநா விட்டுச் சுழன்றதம்மா! | 136 |
1581 | | பண்டங்கள் வாரி இறைத்தாரம்மா! பானங்கள் அள்ளிச் சொரிந்தாரம்மா! குண்டம் நிறையநெய் விட்டாரம்மா! - எரி கோபுரம் போல உயர்ந்ததம்மா! | 137 |
1582 | | வேதம் விதித்த விதிமுறையில் - ஒரு வெள்ளாடு கண்டு பிடித்துவந்து, பாதக மான பலியிடவே - அங்கு பாரில் கிடத்தி யிருந்தாரம்மா; | 138 |
1583 | | ஆடுகள் விட்ட உதிரமெல்லாம் - அங்கோர் ஆறாக ஓடிப் பரந்ததம்மா! நாடியவ் வேள்விக் களத்தை விரித்திட நாவும் நடுங்கி ஒடுங்கு தம்மா! | 139 |
1584 | | நீட்டிக் கழுத்தை அறுப்பதற்கோ? - அதன் நெஞ்சை வகிர்ந்து பிளப்பதற்கோ? தீட்டிய கத்தியும், கையுமாக - ஒரு தீக்ஷிதர் முன்வந்த நின்றாரம்மா! | 140 |