பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு337

Untitled Document
பேணி உமக்கிடும் பெரும்பலி இதுவாம்;
உயிரொடு துள்ளி ஒழுகிடும் உதிரம்
கண்களிற் கண்டு களிப்பீ ராகுக!
சீரிய குணத்துஎம் செங்கோல் மன்னன்
பாரில் செய்த பழியும் பாவமும்
தாங்கி இவ்வாடு சாவக் கையினில்
வாங்கும்இவ் வாளால் வதைத்துஅவ் வூனையும்
எரிவாய் இடுவன், யாவும்
பொரியாய்ப் புகையாய்ப் போவது குறித்தே
141
வேறு
1586 என்று சொல்லியாக தீக்ஷிதரும் - வானை
     ஏந்திய கையினை ஓங்குகையிலே,
பொன்றும் உயிரினைக் காக்கவரும் - அந்தப்
     புண்ணிய மூர்த்தியும் ஓடிவந்து
142
1587 “அண்ணலே இக்கொடும் பாவிஇவ் வேளையில்
     ஆட்டினைக் கொல்லா தருள்புரிவீர்
திண்ணிய ஞான முடையவரும் - இந்தத்
     தீவினை செய்வரோ?” என்றுரைத்தான்.
143
1588 காலிலே கட்டிய கட்டவிழ்த்தான் - அதன்
     கண்டம் இறுக்கிய கட்டவிழ்த்தான்;
வாலிலே கட்டிய கட்டவீழ்த்தான் - அதன்
     வாயிறினிற் கட்டும் அவிழ்த்துவிட்டான்!
144
1589 நின்றவர் கண்டு நடுங்கினரே - ஐயன்
     நேரிலே நிற்கவும் அஞ்சினரே;
துன்று கருணை நிறைந்தவள்ளல் - அங்கு
     சொன்ன மொழிகளைக் கேளும், ஐயா;
145
1590 “வாழும் உயிரினை வாங்கிவிடல் - இந்த
     மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;
வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு
     வேந்தன் நினைக்கினும் ஆகாதையா!
146