| | வேறு | |
1586 | | என்று சொல்லியாக தீக்ஷிதரும் - வானை ஏந்திய கையினை ஓங்குகையிலே, பொன்றும் உயிரினைக் காக்கவரும் - அந்தப் புண்ணிய மூர்த்தியும் ஓடிவந்து | 142 |
1587 | | “அண்ணலே இக்கொடும் பாவிஇவ் வேளையில் ஆட்டினைக் கொல்லா தருள்புரிவீர் திண்ணிய ஞான முடையவரும் - இந்தத் தீவினை செய்வரோ?” என்றுரைத்தான். | 143 |
1588 | | காலிலே கட்டிய கட்டவிழ்த்தான் - அதன் கண்டம் இறுக்கிய கட்டவிழ்த்தான்; வாலிலே கட்டிய கட்டவீழ்த்தான் - அதன் வாயிறினிற் கட்டும் அவிழ்த்துவிட்டான்! | 144 |
1589 | | நின்றவர் கண்டு நடுங்கினரே - ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினரே; துன்று கருணை நிறைந்தவள்ளல் - அங்கு சொன்ன மொழிகளைக் கேளும், ஐயா; | 145 |
1590 | | “வாழும் உயிரினை வாங்கிவிடல் - இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்; வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு வேந்தன் நினைக்கினும் ஆகாதையா! | 146 |