பக்கம் எண் :

34கவிமணியின் கவிதைகள்

Untitled Document
குழந்தைப் பாடல்கள் (4)

31. கடல்
185   எல்லை அறியாய் பெருங்கடலே - நீதான்
     இரவும் உறங்காயோ? கடலே
அல்லும் பகலும் அலைகடலே - உனக்கு
     அலுப்பும் இலையோ கருங்கடலே

186   உருண்டு திரண்டு வருங்கடலையே - உடைந்து
     ஓடிப் போவதேன் - கடலே
வெருண்டு மதிகெட்டாய் கடலே - பாறை
     விலகிப் போகுமோ கடலே

187   பொங்கு திரைகளோ? கடலே - அவை
     புரவி நிரைதாமோ? கடலே!
எங்கும் உனதொலியோ? கடலே! - அன்றி
     இடியின் முழக்கமோ? கடலே!

188   ஓடம் எடுத்தெறியும் கடலே! - தயை
     உனக்குச் சற்றிலையோ? கடலே!
ஆடல் வீடிதனைக் கடலே! - நீயும்
     அழிப்ப தழகாமோ? கடலே!

189   மலையை வயிற்றடக்கம் கடலே! - எண்ணில்
     மகர மீனுலவும் கடலே!
விலைகொள் முத்தளிக்கும் கடலே! - சிப்பி
     விளையாட டற்குதவும் கடலே!

190   மழைக்கு மூலமும்நீ, கடலே! - அதை
     வாங்கி வைப்பதும் நீ, கடலே!
வழுத்து மகிமையெலாம் கடலே! - எவர்
     மதித்து முடிக்கவலார் கடலே!


32. சந்திரன்
191 மீனினம் ஓடிப் பரக்குதம்மா! - ஊடே
     வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறுதம்மா! - இந்த
     மாட்சியி லுள்ளம் முழுகுதம்மா!