| | வேறு | |
1632 | | “அத்திமரம் ஓங்கியெழும் அருஞ்சோலை யதனில் அயலொருவர் துணையின்றி அடியாளும் அன்பாய்ப் புத்திரனைப் போற்றிவரும் பொறுமையினைக் கண்டு புண்ணியநீ கொண்டபரிவு அளவுண்டோ ஐயா? | 189 |
1633 | | தலைநாளில் நீகண்ட சிறுமகனும் இன்று தள்ளாடும் உயிரோடு கிடக்கின்றான் ஐயா! தொலையாத கொடும்பாவி யானும்இனி இந்தத் தொல்லுலகில் வாழ்வதிலோர் பயனுண்டோ ஐயா? | 190 |
1634 | | சிரித்தமுகம் எனமலர்ந்து செழித்தசெடி நடுவே சிறுமகனும் விளையாடித் திரிந்திடும்அவ் வேளை விரித்தபட மெடுத் தரவொன்று அடுத்தொருகை பற்றி விளங்குமணிக் கடகமென விளைந்து கிடந்ததுவே. | 191 |
1635 | | பால்மணம் மாறாதசிறு பாலகனும் அறியான் படஅரவை விளையாட்டுப் பண்டமெனக் கொண்டான்; வாலினையும் தலையினையும் வயிற்றினையும் வலித்து வருத்தமெழச் சிறுகுறும்பு செய்துவிட்டான், ஐயா! | 192 |
1636 | | சிறுபொழுது சென்றிடஎன செல்வமகன் உடலில் சீதமிகப் பரந்துணர்வு தீர்ந்துவிட்ட தையா! நிறுத்தவிழி ஒருநிலையில் நின்றுவிட்ட தையா! நீட்டியகால் மடங்காது நிமிர்ந்துவிட்ட தையா! | 193 |
1637 | | விடமேறி மடிந்ததென விளம்புகின்றார் சிலரே; விதியாலே விளைந்ததென விரிக்கின்றனர் சிலரே. தடையில்லை இதுமூடு சன்னியென்றார் சிலரே, சஞ்சீவி அளித்தாலும் சாமென்றார் சிலரே. | 194 |
1638 | | வயித்தியரைக் கண்டிந்த வரலாறு சொல்லி, ‘மயக்கமிது நீங்கஒரு மருந்திலையோ?’ என்றேன்! ‘பயித்தியமோ இனியே தும்பயனில்லை, என்றார். ‘பட்டமரம் தளர்த்திடுமோ பாரிடத்தில்’ என்றார். | 195 |
1639 | | அன்பாக அரவிட்ட சிறுமுத்தல் அதனால் ஆவிக்கும் இடையூறுண் டாமோஎன் ஐயா! வன்பாரில் மகவிழந்து வாழ்வேனோ ஐயா! மலையேறிக் குதித்துயிரை மாய்ப்பேனே ஐயா! | 196 |