முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 353 |
Untitled Document 9. புத்தரும் மகனிழந்த தாயும் | (சிறிது காலஞ் செல்ல, சுஜாதையின் மகவு இறந்து விடுகிறது. அப்போது புத்தர் அவ்வூர் வர அவள் தன் மகவை உயிர்ப்பிக்குமாறு அவரை வேண்டுகிறாள். அவர் அவளுக்கு அறிவுரை கூறி, ‘பிறப்புளதேல் இறப்புமுண்டு’ என்பதைப் போதித்த வரலாறு இதனுள் கூறப்படுகிறது). |
| | மண்ணில் வாழ்வுறும் மக்கள் மடிவது திண்ண மென்றுளந் தேறத் தெளிவுரை அண்ணல் அன்றோர் அணங்கினுக் கோதிய புண்ணி யம்பெறு கதை புகலுவாம் | | | | வேறு | | 1628 | | முடமான இளமறியை முதுகில் ஏந்தி மூவுலகும் கருணையினால் வென்ற வீரன் திடமாகப் பல உயிரும் அளிக்குஞ் சோணைத் தெய்வநதிக் கரைவந்து சேர்ந்த போது | 185 | | | வேறு | | 1629 | | மானைப் பழித்த விழியுடையாள் - ஒரு மாமயில் போலும் நடையுடையாள்; தேனைப் பழித்த மொழியுடையாள் - பெண்ணின் தெய்வ மெனத்தகும் சீருடையாள். | 186 | 1630 | | ஆறாகக் கண்ணீர் வடித்துநின்றாள் - கையில் ஆண்மக வொன்றையும் ஏந்திநின்றாள்; தேறாத உள்ளமும் தேற்றுவிக்கும் - ஞான தேசிகன் சேவடி போற்றிநின்றாள். | 187 | | | வேறு | | 1631 | | சந்திர மதிபோல் நின்ற தையலை நோக்கி ஐயன் வெந்துயர் விளைந்த தென்னை விளம்புக எனலும்அன்னாள் நைந்துநொந் துருகி யுள்ளம் நயனத்தின் வழியா யோட மைந்தனைக் காட்டி இந்த மறுமொழி கூற லுற்றாள்; | 188 | |
|
|