| | என்னும் மொழிகளினி எக்காலம் கேட்பனையா? | 204 |
1648 | | நெஞ்சிற் கவலையெல்லாம் நிற்காமல் ஓட்டும்அந்தப் புஞ்சிரிப்பைக் காணாது புத்திதடு மாறுதையா! | 205 |
1649 | | இட்டளைந்து கூழைஎனக்கு இன்னமுதம் ஆக்கியகை கட்டழிதல் கண்டுமனம் கறங்காய்ச் சுழலுதையா! | 206 |
1650 | | சோலைப் பசுங்கிளிகள் தேழனையும் காணாமல் நாலு திசைகளிலும் நாடித் திரியாவோ? | 207 |
1651 | | அன்னப் பறவைகளென் அழகனைப் பார்க்கவந்தால் என்னமொழி கூறஇனி என்நா எழுமையா? | 208 |
1652 | | துள்ளிவிளை யாடஎன்றன் சுந்தரனைத் தேடிவரும் புள்ளிமான் கன்றினுக்குஎப் பொய்சொல்லி நிற்பனையா? | 209 |