பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு357

Untitled Document
1656 கழுத்திற் கயிறிறுக்கிக்
     கன்றுவிழக் கண்டகனா,
பழுத்துப் பலித்திடுமோ?
     பலன்மாறி நின்றிடுமோ?
213
1657 தாயாகி உள்ளம்
     தருக்கி யிருந்ததுபோய்ப்
பேயாக இன்று
     பிணந்தூக்கி நிற்பேனோ?
214
1658 இந்தப் பிறவியில்யான்
     எப்பிழையும் செய்தறியேன்;
எவ்விதம் என்வயிற்றில்
     இவ்விடியும் வீழ்ந்ததையா?”
215
வேறு
1659 கன்றொ ழிந்தகா ராவின் கலக்கமொத்து
     அன்றி அரற்றி அழுத அரிவையை
என்றும் எங்ஙணும் எவ்வுயி ரும்தொழ
     நன்றுகண்ட மெய்ஞ் ஞானியும் நோக்கியே,
216

வேறு
1660 “தாயேநின் மனக்கவலை - ஒழிந்திடத்
     தக்கநல் மருந்தளிப்பேன்;
சேயினை எழுப்பிடுவேன் - விளையாடித்
     திரியவும் செய்திடுவேன்.
217

1661 நாவிய கடுகுவேண்டும் - அதுவுமோர்
     நாவுரி தானும் வேண்டும்;
சாவினை அறியாத - வீட்டினில்
     தந்ததா யிருக்க வேண்டும்!
218

1662 பக்கமாம் பதிகளிலே - சென்றுநீ
     பார்த்திது வாங்கிவந்தால்;
துக்கமும் அகலுமம்மா! - குழந்தையும்
     சுகமாக வாழுமம்மா!”
219