Untitled Document 1682 | | யானும் நீயும் இறந்தபினும், இராஜா ராஜன் பட்டபினும், ஊனம் இன்றி இவ்வுலகம் ஊழி ஊழி நின்றிடுமால்; கூனக் கிழவி ஒருசிறுகல் குனிந்து வீசி எறியில், அதை மானக் கடலும் மந்தரமா மலையென் றெண்ணி மலைந்திடுமோ? | 13 |
1683 | | கொற்ற மன்னர் முடிசூடிக் கொலுவில் அமர்ந்த திருக்கோயில், முற்றுங் கூகை ஆந்தையொடு முதுபேய் வாழும் காடாமோ; வெற்றி வில்லை ஏந்திமுனம் வேட்டை செய்த வேடன்கை பற்றி நரிகள் இழுப்பதையும் பாரில் கண்ணாற் பார்ப்போமே. | 14 |
1684 | | மன்னர் பட்ட படுகளத்தில் மலரும் ரோஜா மலரைப்போல், வன்ன ரோஜா மலர்வேறு வனத்தி லெங்கும் வளர்வதுண்டோ? புன்னைக் கிளைகள் எழுந்தோங்கிப் பூத்துச் சொரியும் புனிதநிலம், கன்னி யொருத்தி முத்தாரம் கழன்று வீழ்ந்த இடமலவோ? | 15 |
1685 | | இருந்து சென்ற முன்னோரின் இடத்தி லெல்லாம் யாம் இன்று விருந்து செய்து வாழ்கின்றோம்; விகடம் சொல்லி மகிழ்கின்றோம்; இருந்த இடம்விட்டு யாமும் இனி எழுந்து சென்றால் இங்கிருந்து விருந்து செய்வார் யார்யாரோ? விகடம் சொல்வார் யார்யாரோ? | 16 | |
|
|