முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 363 |
Untitled Document 1678 | | வாராய் நண்பா! வருத்தமெனும் வாடைக் காலப் போர்வையினை, நேரா வருமிவ் வசந்தமெனும் நெருப்பில் வீசி எறிவாயே தேரா வாழ்வின் பறவை, இனும் செல்லுந் தூரம் சிறிதேயாம்; பாராய்! பாராய்! பறவை, அதோ பறக்கச் சிறகும் விரித்ததடா! | 9 |
1679 | | ஒழிந்த பாழில் ஒருகணமாம்; உயிர்வாழ் உலகில் ஒருகணமாம்; வழிந்து விண்ணில் மீன்களெல்லாம் மங்கி மங்கி மறைந்தனவே. அழிந்த பாழின் உதயம்கண்டு அறியச் செல்வோர் அனைவருமே எழுந்து நின்றார் கண்டிலையோ? எழுவாய்! எழுவாய்! எழுவாயே! | 10 |
1680 | | வாரி வாரிக் கொடுத்தவரும் வழங்கி டாது வைத்தவரும் பாரில் மண்ணாய்ப் போனதலால், பசும்பொன் னானது அறியோமோ! ஊரில் அவர்தம் உடலையெடுத்து உரையும் நிறையும் காணாரே; ஓரும் உள்ளத் துண்மையிதை ஊன்றி நோக்கி உணர்வாயே. | 11 |
1681 | | வையம் பழைய அரண்மனையாம்; வாயில் இரவு பகலேயாம்; மெய்யின் இங்குக் கொலுவிருந்து விதித்த காலம் அரசாண்டு, செய்ய மணிமா முடிவீழச் சென்ற மன்னர் எண்ணிலரால்; ஐய! இதனை உள்ளத்தில் ஆழ்ந்து காணல் அறிவாமே. | 12 | |
|
|