Untitled Document 1690 | | அன்றென் இளமைப் பருவத்தில் அறிவிற் சிறந்த புலவரையும் நன்று சீல முடையபெரு ஞானி களையும் அடிபணிந்து நின்று கேட்ட வாதங்கள் நினைப்பின் அரிய ஆயிடினும், சென்ற வாயில் வழியேதான் திரும்பி அந்தோ! வந்தேனே. | 21 |
1691 | | அரிய பெரிய ஞானிகளோடு அறிவின் விதைகள் விதைத்துவந்தேன்; பெருகி ஞானம் வளர்ந்தோங்கப் பேணிப் பணிகள் பலசெய்தேன்; உரிய காலைக் கண்டபலன் உண்மை கூறின் இதுவேயாம்; வருதண் ணீரைப் போல்வந்தேன்; மாயக் காற்றைப் போல்மறைந்தேன். | 22 |
1692 | | ஏனோ உலகில் வந்தேன்? முன் இருந்த இடமும் எவ்விடமோ? கானா றோடும் கதியேபோல், கண்ட கண்ட படிபோனேன்; வானோக் கியபாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே, யானோர் காலை வெளியேறில் எங்கே குவனோ? அறியேனே. | 23 |
1693 | | மலையில் ஏறி நிற்கின்றோம், மறிந்து கடலில் வீழ்கின்றோம்; சுலவு புயலில் அக்கப்பட்டுச் சுழன்று சுழன்று செல்கின்றோம்; அலையில் நுங்கும் நுரையுமலால் அடைந்த பயன்வே றொன்றுமிலை. உலகின் உண்மை இதுவல்லால் உரைக்க வேறொன் றுண்டோ? சொல். | 24 | |
|
|