முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 367 |
Untitled Document 1694 | | மண்ணை வலமாய்ச் சுற்றிவந்தேன், வானும் அளந்து கணக்கிட்டேன்; நண்ணும் வழியில் பலசிக்கல் நாடி நன்கு விளக்கிவந்தேன்; எண்ணும் மனிதர் தமையடையும் இறப்பும் ஊழும் இவையென்று, திண்ண மாகச் சொல்லஎதும் தெரியா திங்கே திகைத்தேனே. | 25 |
1695 | | திட்டிக் கதவு தெரிந்ததடா! திறவு கோலும் இல்லையடா! கட்டித் திரையும் கண்டதடா! கண்ணும் மயங்கி நின்றதடா! ஒட்டிச் சிறிது நீநானென்று உரைத்த உரையும் கேட்டதடா! நட்ட காலம் பின்னையடா! நான்நீ அற்றப் போச்சுதடா | 26 |
1696 | | பாரின் மீது கவிழ்த்தஒரு பானை யாமிவ் வானகமே; சாரு மிதன்கீழ் எவ்வுயிரும் தங்கி வாழ்ந்து மறைந்திடுமால்; யாரும் இதனை நோக்கிவரம் இரந்து வேண்டி நிற்பாரோ? தேரின் இதுவும் நம்மைப்போல் திகைத்தெந் நாளும் சுழன்றிடுமே. | 27 |
1697 | | இருளில் ஏகும் மக்களெலாம் இடறி வழியில் வீழாமல், அருளி அழைத்துச் செல்லவிதிக்கு அளித்த தீபம் யாதென்றேன்; உருளும் வானம் எனைநோக்கி, ‘உணர்ந்தும் உணரா உணர்வென்னும் மருளி ஞானம் உளது’ என்ன மாற்றம் தந்து சென்றதம்மா! | 28 | |
|
|