முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 369 |
Untitled Document 1702 | | மண்ணில் உடைந்த மண்ணாக மாறி மண்ணில் மறைந்திடுமே; மண்ணிலிருந்து மண்ணெடுத்து வனைந்து வைத்தான் இவ்வுடலை; எண்ணி இதனை அறியாதார் ஏதும் அறியார்; இவ்வுலகில் நண்ணும் வினைகண்டு, அஞ்சிநிதம் நடுங்கி நடுங்கி நலிபவரே. | 33 |
1703 | | மண்ணிற் செய்த கலமுடையின் மண்ணில் மண்ணாய் போகுமென, எண்ணி முன்னாள் அக்குயவன் எனையும் மண்ணில் வனைந்தனனால்; உண்மை இதனை உள்ளத்தில் ஊன்றி உணரா மாந்தரெலாம் வெண்மை பேசித் திரிபவரே, வீணாய் வாதம் செய்பவரே. | 34 |
1704 | | படைத்த மண்ணும் நல்மண்ணோ? பழுது நிறைந்த பொய்மண்ணோ? படைத்த மண்நல் மண்ணானால், பானை உடைந்து போவதுமேன்? படைத்த மண்ணில் பழுதுளதேல் பழிதான் எவரைச் சார்ந்ததுவாம்? படைத்த படைப்பின் உண்மையெலாம் பாரில் யாரே பகர்ந்திடுவார்! | 35 |
1705 | | வந்த வந்த மனிதரெலாம் வளைவும் நெளிவும் கண்டென்னைச் சந்த மில்லாப் பானையெனத் தள்ளி வைத்துச் சென்றனரால்; அந்த நாள் அக் குயவன்கை ஆட்டத் தாலே நேர்ந்தபிழைக்கு இந்த நாளில் ஏழைஎனை ஏனோ குறைகள் கூறவரே? | 36 | |
|
|