பக்கம் எண் :

370கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1706 மன்னும் ரம்ஸான் முடிவினிலே,
     மாலைப் பெழுதில், வான்மீது
சின்ன மதிவந் தெழுமுன்னம்,
     சேரிக் குயவன் கடைதன்னில்,
வன்னப் பானை சட்டியெல்லாம்
     வைத்த அறையின் நடுவேயான்
தன்னந் தனியே போய்நின்ற
     சரிதமிதனைக் கேளாயோ!
37

1707 கண்ணிற் கண்ட அற்புதமாம்;
     காதிற் கேட்ட மொழியேயாம்;
மண்ணிற் செய்த கலமொன்று
     மாயமாக வாய்திறந்து
‘வண்ணக் கலமிங் கெவரேயாம்?
     வனைந்த குயவன் யாரேயாம்?
எண்ணி யறிந்து விடைதருவார்
     யாவருள்ளார்?’ என்றது, அம்மா!
38

1708 உண்ட வெறியில் முன்னொருநாள்
     உண்ட கலத்தை உடைத்தெறிந்தேன்
துண்டாய் துண்டாய்ப் போனகலம்
     துணிந்து மெல்ல எனைநோக்கிப்
‘பண்டு யானம் உன்வாழ்வைப்
     பாரில் அடைந்தேன்; நீயுமெனக்கு
அண்டு இந்த வாழ்வைஇனி
     அடைவாய், உண்மை என்றதடா!
39

1709 நலஞ்செய் பன்னீர் நாடியொரு
     நந்த வனத்தை நானடைந்தேன்;
உலர்ந்து வெந்து கரித்தங்கோர்
     உரோஜா நின்ற நிலைகண்டு
‘கலந்த நோயும் யாது?’ என்றென்;
     காதில் மெல்ல, ‘யாம் முன்னம்
மலர்ந்த முகமாய் விளையாடி
     வாழ்ந்த இடம்ஈது’ என்றதம்மா!
40