முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 371 |
Untitled Document 1710 | | வசந்த ருதுவும் வந்திடுமோ? வாச மலர்கள் பூத்திடுமோ? கசிந்து பாடும் குயில்இன்னும் காது குளிரச் செய்திடுமோ? இசைந்த இளமைப் பருவத்தின் இனிமை இனியும் எய்துவனோ? அசைந்த உள்ளம் தேறுமொழி ஆரே கூற வல்லாரே? | 41 |
1711 | | இருளின் வாயிற் படிதாண்டி எமக்கு முன்னே சென்றவர்கள் கருது கோடி கோடியின் மேல் கணக்கில் லாதார் ஆயிடினும் ஒருவரேனும் வழியிது வென்று உண்மை கூற வந்தனரோ? அறிய வழியை நாமும் இனி அளந்து காண வேண்டுமடா! | 42 |
1712 | | நெஞ்சே! நீயும் எத்தனைநாள் நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்? வஞ்ச உலகில் மற்றெவையும் மறந்து நீக்கி யறவிட்டுத் தஞ்ச மாக நட்பொன்றும், தழைக்கும் ரோஜா வனமொன்றும், விஞ்ச மதுவுண் கலமொன்றும், விரும்பி வேண்டிப் பெறுவாயே. | 43 |
1713 | | அன்பே! யானும் நீயும் இசைந்து அயலில் எவரும் அறியாமல் வன்பே உருவாம் விதியினையும் வளைத்துள் ளாக்கி முயல்வோமேல், துன்பே தொடரும் இவ்வுலகைத் துண்டு துண்டாய் உடைத்துப்பின் இன்பே பெருகி வளர்ந்திடுமோர் இடமாய்ச் செய்ய இயலாதோ? | 44 | |
|
|