212 | | குன்றும் குகைகளுமோ? வெண்ணிலாவே! - அன்றிக் வனக் கிழவிதானோ? வெண்ணிலாவே |
213 | | ஆழியும்நீ வரக்கண்டு வெண்ணிலாவே! - குதித்து ஆடுவதெக் காரணமோ? வெண்ணிலாவே! |
214 | | ஆதாரம் ஒன்றில்லாமல் வெண்ணிலாவே! - நீயும் அந்தரத்தில் நிற்பதேனோ? வெண்ணிலாவே! |
215 | | சுற்றித் திரிவதும்ஏன்? வெண்ணிலாவே! - உனக்குச் சொந்த இடம் ஒன்றிலையோ? - வெண்ணிலாவே! |
| | |
216 | | அண்டிவாராய் நீயெனினும், வெண்ணிலாவே! - இன்னும் அகன்றெங்கும் போய்விடாதே, வெண்ணிலாவே! |
217 | | பறக்கச் சிறகிருந்தால், வெண்ணிலாவே! - உன்றன் பக்கம் வந்து சேருவேனே, வெண்ணிலாவே! |
218 | | பால்போல் நிலவெறிக்கும் வெண்ணிலாவே; - என்றன் பாங்கில்விளை யாடவாராய்! வெண்ணிலாவே! |
219 | | பாங்கில்விளை யாடவந்தால், வெண்ணிலாவே! - நல்ல பால்தருவேன், பழந்தருவேன், வெண்ணிலாவே! |
220 | | துன்பமிக்கத் தாமடைந்தும், வெண்ணிலாவே! - பிறர்க்குச் சுகமளிப்பார் உன்போலுண்டோ? வெண்ணிலாவே! |
221 | | இருளதனை விழுங்கவல்ல வெண்ணிலாவே! - உன்னை இருள்விழுங்கும் சூழ்ச்சியெதோ? வெண்ணிலாவே! |
| | |