200 | | இரவைப் பகலாயியற்றுதம்மா வெப்பம் இல்லா திளைப்பெல்லாம் ஓட்டுதம்மா அரவம் விழுங்கினும் அஞ்சாதம்மா எங்கள் ஆண்டவன்சூடும்மணியே அம்மா |
| | |
201 | | பொன்மரம் காய்த்த கனியிதுவோ?இந்தப் பூமகள் ஆடும் கழங்கிதுவோ கன்மன முங்களி கொள்ளக் கவினொளி காட்டி விளங்கும் மதியிதுவோ |
| | |
202 | | கண்ணுதல் உள்ளக் கருணையதோ?கொற்கைக் காவலர் கண்ட புகழதுவோ மண்ணகஞ் செய்திடு புண்ணியமோ?இன்று வானகம் வந்து நிலவுதம்மா |
| | 33. வெண்ணிலா |
203 | | மீன்கள்கொடி கோடிசூழ வெண்ணிலாவே ஒரு வெள்ளியோடம் போலவரும் வெண்ணிலாவே |
204 | | பானுவெங் கதிர்குளிக்கும் வெண்ணிலாவே!நித்தம் பாற்கடலும் ஆடுவையோ?வெண்ணிலாவே |
205 | | ஆம்பல்களி கூரவரும் வெண்ணிலாவே!உனக்கு அம்புயம்செய் தீங்கெதுவோ?வெண்ணிலாவே |
206 | | இரவையும்நண் பகலாக்கும் வெண்ணிலாவே உன்னை இராகுவும் விழுங்கிடுமோ?வெண்ணிலாவே |
207 | | வளர்ந்து வளர்ந்துவந்த வெண்ணிலாவே!மீண்டும் வாடிவாடிப் போவதேனோ?வெண்ணிலாவே |
208 | | கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே!பகல் கூட்டினில் உறங்குவாயோ?வெண்ணிலாவே |
209 | | பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே நீயும் பாரில்வர அஞ்சினையோ?வெண்ணிலாவே |
210 | | பளிங்குபோலும் உன்னுருவில் வெண்ணிலாவே கறை பற்றியே இருப்பதேனோ வெண்ணிலாவே |
211 | | பூமியின் உருநிழலோ?வெண்ணிலாவே அது போகாக் குறுமுயலோ?வெண்ணிலாவே |