முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 389 |
Untitled Document 1782 | | இல்லாப் பொருளுக் கேங்காமல் இருக்கும் பொருளும் எண்ணாமல் எல்லாம் வல்ல எம்பெருமான் இரங்கி அளக்கும் படிவாங்கி, நல்லார் அறிஞர் நட்பையும்நீ நாளும் நாளும் நாடுவையேல், நில்லா உலகில் நிலைத்தசுகம் நீண்டு வளரும் நிச்சயமே. | 113 |
1783 | | எழுதிச் செல்லும் விதியின்கை எழுதி எழுதி மேற்செல்லும்; தொழுது போற்றி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும், அழுது கண்ணீர் விட்டாலும், அபயம் அபயம் என்றாலும் வழுவிப் பின்னால் ஏகியொரு வார்த்தை மாற்றம் செய்திடுமோ? | |
1784 | | பாரி போலக் கொடுத்தவரும், பணத்தைப் புதைத்து வைத்தவரும், தேரின் மண்ணாய்ப் போனதலால், செம்பொன் னானது அழியோமோ; ஊரில் அவர்தம் உடலையெடுத்து உரையும் நிறையும் காணாரே; ஒரும் உள்ளத் துண்மையிதை ஊன்றி நோக்கி உணர்வாயே. | | |
|
|