Untitled Document தே.வி.யின் கீர்த்தனங்கள் | 1. குலதெய்வம் |
இராகம் - பிலகரி | | | தாளம் - ஆதி | | | பல்லவி | | 1785 | | பாதார விந்தம் பணிந்தேன் - கடைக்கண்நீ பாலிக்க வேண்டு மம்மா! | (பாதார) | | | அநுபல்லவி | | | | மாதா பிதாவும் நீயே! மந்த்ர குரு நீயே! ஆதாரம் எனக்கு வே றாரும் ஒருவருண்டோ? | | | | சரணம் | | | | வெம்பு பிணியில் விழுந்து - வருந்திநிதம் விழிநீர் பொழிகின்றேன், கும்பிடும் தெய்வமே! குலதெய்வமே! உன்னை நம்பிடும் ஏழையைக்கை நழுவ விடலாமோ? | | | | 2. என்று வருவாரோடி? | |
இராகம் - காமவர்த்தினி | | | தாளம் - ஆதி | 1786 | | என்று வருவா ரோடி? - என்மீ திரக்கமும் கொள்ளா ரோடி? | | | | அநுபல்லவி | | | | இன்று வருவாரோ? நாளை வருவாரோ? இன்னும் ஒருவாரம் நின்று வருவாரோ? (என்று) | | |
|
|