பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு391

Untitled Document
சரணம்

  மன்றில் நடமாடும் - அந்த
     வள்ளலிடம் தூது
சென்ற கிளி எங்கே
     சென்றதோ? யானிங்கே
தீயில் விழுந்த
     புழுவாய்த் துடிக்கின்றேன்!
(என்று)

3. பாக்கியத் திருநாள்

இராகம் - நவரஸக் கன்னட     தாளம் - ஆதி

பல்லவி

1787 பாரதத் தாய் செய்த - தவத்தால்
     பாக்கியம் பிறந்த நாளாம்
 

அநுபல்லவி

  சீரிய ராக மக்கள்
     சிறந்திடச் சுதந்திர
சூரியன் வந்துதித்த
     தூய நன்னாளே (பாரதத்)
 

சரணம்


  வாளமர் செய் துலகம் - நரகமாய்
     மாறி வருந்திடாமல்,
ஆளும் அரசுரிமை
     அறப்போரினா லடைந்தெந்
நாளும் விளங்க வெற்றி
     நாட்டிய நாளே

மடமை மறைந்து நிதமும் - கலைகள்
    வளர்ந்து வளர்ந்து வரவே,
மிடிமை ஒழிந் தறங்கள்
    மேன்மேலும் ஓங்கிடவே

(பாரதத்)