Untitled Document | | கொடுமை தணிந் தரசு குடியர சாகிடவே அடிமைத் தளை யறுத்த ஆகஸ்டு பதினைந்தே | (பாரதத்) | | | 4. பரமேசுவரி | | இராகம் - ஸிம்மேந்திர மத்யமம | | | தாளம் - மிஸ்ரசாபு | | | பல்லவி | | 1788 | | உன்னையே நம்பினே னம்மா! - பரமேஸ்வரி உன்னையே நம்பினே னம்மா! | | | | அநுபல்லவி | | | | அன்னையே நின்னையல்லால் ஆழிசூ ழிவ்வுலகில் என்னையா தரித்தாள எவரும் ஒருவருண்டோ? (உன்னையே) | | | | சரணம் | | | | நில்லா உலக வாழ்வை - ஏழைநான் நிலையென்று கொண்டு நித்தம் பொல்லா வழிகளிலே புத்திகெட் டலைந்திட்டேன், எல்லாம் நீ பொறுத்துள்ளம் இரங்கி அருள்புரிவாய்! | (உன்னையே) | | | 5. மாமுருகா! | | இராகம் - சுரடி | | | தாளம் - ஆதி | | | பல்லவி | | 1789 | | உன்னிடத் தன்றிவே றேவரிடத் தென்குறைகள் உரைத்திடச் செல்வே னையா! | | |
|
|