முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 397 |
Untitled Document | | பாவம் பறந்தோடிப் போகும் - பெரும் பாக்கியம் வந்து நம்மைச் சேரும்; தேவர் முனிவருமே காணா - அந்தச் சிவலோக வாழ்வும் நமக்கெய்தும் | (நல்லது) | | | 12. உன்னாலே என்ன ஆகும்? | | இராகம் - அஸாவேரி | | | தாளம் - மிச்ரசாபு | | | பல்லவி | | 1796 | | உன்னாலே என்ன ஆகும்? - ஏழை மனிதா! உன்னாலே என்ன ஆகும்? | | | | அநுபல்லவி | | | | நன்னாரிற் பூட்டியொரு நாயகன் ஆட்டி யல்லால், தன்னாலே ஆடும் பாவை தரணியில் எங்கு முண்டோ? (உன்னா) | | | | சரணம் | | | | எல்லாம் இயற்றுதற்கு வல்லான்எம் மறைக்குமே சொல்லால் அளவறுத்துச் சொல்லற் கரியபிரான், நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்று நடஞ்செயும் அல்லாரும் கண்டனவன் அருளைப் பெறாதிருந்தால் (உன்னா) | | | | 13. கடைக்கண் பாராயோ? | | இராகம் - கமாஸ | | | தாளம் - ரூபகம் | | | பல்லவி | | 1797 | | கடைக்கண் பாராயோ? - உள்ளம் கனிந் தருளாயோ? | | |
|
|