| | அநுபல்லவி | |
| | அடைக்கலம் புகுந்தேன் - துணைவே றாருமில்லை ஐயா! | (கடைக்) |
| | சரணம் | |
| | பத்தரோ டுன்னை - நிதமும் பணிந்து போற்றாமல், புத்தகக் காட்டில் - அலைந்து பொழுதைப் போக்கிவிட்டேன் | (கடைக்) |
| | வாசத் துளவத்தின் - மகிமை மனதிலோ ராமல், காசு பணத்தையே - எண்ணிக் காலம் போக்கிவிட்டேன் | (கடைக்) |
| | முற்றுமன்பாலே - திருவாள் மொழியை ஓதமால், வெற்று ரையாடி - நாளை வீணாய்ப் போக்கிவிட்டேன் | (கடைக்) |
| | எட்டெழுத்தை நெஞ்சில் - அன்போ டெழுதி வையாமல், பட்ட மன்னவரின் - கதைகள் பாடம்பண்ணி நின்றேன் | (கடைக்) |
| | மன்னர் சபையிலே - நின்று மறுகி ஓலமிட்ட அன்னை பாஞ்சாலிக்கு - அபயம் அளித்த மாமுகிலே! | (கடைக்) |
| | ஆதி மூலமே! - எனுமுன் ஆனைமுன் வந்த நாத நாரணா! - பதும நாப! கோவிந்தா! வேத நாயகா! - முகுந்தா! வேணு கோபாலா! மாதவா! க்ருஷ்ணா! - திருவாழ் மார்பா! கேசவா! | (கடைக்) |